தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (NSS) 80வது சுற்றின் ஒரு பகுதியாக கல்வி குறித்த சமீபத்திய விரிவான மாதிரி ஆய்வு (CMS) நடத்தப்பட்டது.
இன்றளவும் நாடு தழுவிய அளவில் அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான மாணாக்கர்கள் சேர்கின்றனர் என்ற நிலையில் இது மொத்த மாணவர் சேர்க்கையில் 55.9% ஆகும்.
கிராமப்புறங்களில் இருந்து, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் அரசு கல்வி நிறுவனங்களில் பயில்கின்றனர்.
இதற்கு நேர்மாறாக, நகர வாழ் குழந்தைகளில் 30.1% மட்டுமே அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர்.
33% மாணாக்கர்கள் வகுப்பறைகள் அல்லது கூடுதல் பயிற்சி நிறுவனங்களுக்கு அப்பால் தனியார் பயிற்சியை சார்ந்துள்ளனர்.
"கூடுதல் தனியார் பயிற்சி" என்பது வழக்கமானப் பள்ளி நேரத்திற்கு அப்பால் மாணாக்கர்கள் மேற்கொள்ளும் கூடுதல் தனியார் பயிற்சியைக் குறிக்கிறது.
இந்தப் பயிற்சிகள் வகுப்பறை கற்றலை வலுப்படுத்துவது, மாணாக்கர்களைத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது அல்லது அவர்களுக்கு ஒரு போட்டித்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.