அணுசக்தி திறனை அதிகரிக்கவும், தூய எரிசக்தி இலக்குகளை ஆதரிக்கவும் இந்தியா மூன்று வகையான சிறிய வகை அணு உலைகளை (SMRs) உருவாக்கி வருகிறது.
300 மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இவை சிறிய மற்றும் மேம்பட்ட வகை அணு உலைகள் ஆகும்.
இதில் பாரத் சிறிய கூறுநிலை அணு உலைகள் (Bharat SMR), SMR-55 மற்றும் மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் உற்பத்திக்கான 'உயர் வெப்பநிலை வாயு குளிரூட்டப்பட்ட அணு உலைகள்' ஆகியவை அடங்கும்.
இவை அழுத்தப்பட்ட நீர் உலைகள் மற்றும் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.
SMR-கள் பாதுகாப்பானவை, செலவு குறைந்தவை மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்க வல்லவை.