இந்தியாவில் சைக்கிள் ஓட்டுதலில் முன்னோடியாக திகழும் 11 நகரங்கள்
July 31 , 2021 1730 days 692 0
இந்தியாவின் 11 நகரங்களுக்கு இந்தியாவில் சைக்கிள் ஓட்டுதலில் முன்னோடியாகத் திகழ்வதற்கான மதிப்புமிக்க பட்டமானது வழங்கப்பட்டுள்ளது.
இது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தினால் அறிவிக்கப் பட்டுள்ளது.
அந்த நகரங்கள் பெங்களூரு, புவனேஷ்வர், சண்டிகர், கொஹிமா, நாக்பூர், கொல்கத்தா, பிம்ப்ரி சிஞ்ச்வாத், ராஜ்கோட், சூரத், வடோதரா மற்றும் வாரங்கல் ஆகியனவாகும்.
சைக்கிள் ஓட்டுதல் குறித்தச் சவால்களின் முதல் முன்னெடுப்புகளை மேற்கொள்ளசி செய்வதற்கு வேண்டி நான்கு நகரங்கள் (ஔரங்காபாத், குருகிராம், ஜபல்பூர் மற்றும் சில்வாசா) ஆற்றிய முயற்சிகளுக்காக இந்தத் தேர்வு மன்றமானது அவற்றிற்கு என்று ஒரு சிறப்புப் பட்டத்தினை வழங்கியுள்ளது.