TNPSC Thervupettagam

இந்தியாவில் டாப்ளர் வானிலை ரேடார் விரிவாக்கம்

May 3 , 2026 14 hrs 0 min 21 0
  • 2026 ஆம் ஆண்டிற்குள் இந்தியா தனது டாப்ளர் வானிலை ரேடார் கட்டமைப்பை 50 அலகுகளாக விரிவுபடுத்தி, நாடு முழுவதும் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தி உள்ளது.
  • ரேடார்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 14-ஆக இருந்ததில் இருந்து 50-ஆக உயர்ந்துள்ளது, இது வலையமைப்பில் 250% க்கும் அதிகமான வளர்ச்சியைக் காட்டுகிறது.
  • இந்த ரேடார்கள் இப்போது இந்தியாவின் 87% பகுதிகளை உள்ளடக்கி, வானிலை நிலவரங்களை சிறப்பாகக் கண்காணிக்க உதவுகின்றன.
  • புயல்கள், பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழையைத் துல்லியமாகக் கணிக்க உதவுவதன் மூலம், பேரிடர் முன்னேற்பாடுகளை இவை மேம்படுத்துகின்றன.
  • இந்த அமைப்பை மௌசம் திட்டத்தின் கீழ் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நிர்வகிக்கிறது.
  • முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் வானிலை சேவைகளை வலுப்படுத்த மேலும் சுமார் 50 ரேடார்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்