கடந்த 10 ஆண்டுகளில் பணியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக 8,630 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற கடுமையான முறைகேடுகள் தொடர்பான புகார்கள் வந்து உள்ளன.
நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள் இந்திய தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளால் "உள்ளக நடைமுறையின்" கீழ் கையாளப் படுகின்றன.
CPGRAMS (மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு) மூலம் சமர்ப்பிக்கப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.