TNPSC Thervupettagam

இந்தியாவில் பிரிவினை சார்ந்த பயங்கரங்கள் நினைவு தினம் 2026 - ஆகஸ்ட் 14

August 15 , 2026 4 days 56 0
  • 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவு கூருவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிரிவினை ஆங்கிலேய ஆட்சியின் முடிவோடு சேர்ந்து வந்தது மற்றும் இந்திய சுதந்திரச் சட்டம், 1947-இன் கீழ் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
  • 1947 ஆம் ஆண்டு ஜூன் 3 அன்று மவுண்ட்பேட்டன் பிரபு பிரிவினைத் திட்டத்தை அறிவித்தார், அதே சமயம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை ராட்கிளிஃப் ஆணையத்தால் வரையப்பட்டது.
  • இந்தப் பிரிவினையானது நவீன வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் இடம்பெயர்வுகளில் ஒன்றைத் தூண்டியது, புதிதாக உருவாக்கப்பட்ட எல்லைகளில் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
  • 2021 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் ஆகஸ்ட் 14-ஐ இந்தியாவில் பிரிவினை சார்ந்த பயங்கரங்கள் நினைவு தினமாக அறிவித்தது.
  • 1947 ஆம் ஆண்டுப் பிரிவினையானது, குறிப்பாக பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் பெருமளவிலான இடம்பெயர்வு, வகுப்புவாத வன்முறை, கொலைகள், கடத்தல்கள், சொத்து அழிவு மற்றும் குடும்பங்கள் பிரிந்து செல்வதற்கு வழி வகுத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்