இந்தியாவில் பிரிவினை சார்ந்த பயங்கரங்கள் நினைவு தினம் - ஆகஸ்ட் 14
August 16 , 2023 916 days 412 0
பிரிவினையால் நிகழ்ந்த தாக்குதல்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று விபஜன் விபிஷிகா ஸ்மிருதி திவாஸ் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
மனித வரலாற்றில் மிகப்பெரிய சில புலம்பெயர்வுகளில் ஒன்றை ஏற்படுத்திய இந்தப் பிரிவினையானது, சுமார் 20 மில்லியன் மக்களைப் பாதிப்புள்ளாக்கியது.
மில்லியன் கணக்கான குடும்பங்கள் தங்கள் மூதாதையர் கிராமங்கள் / நகரங்கள் / பெரு நகரங்களை விட்டுப் புதிதாக தங்களது வாழ்க்கையை அகதிகளாக தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.