இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் 2025
September 5 , 2025 17 days 73 0
'பெண்கள் பாதுகாப்புக் குறியீடு (NARI) 2025' ஆனது இந்தியாவின் 31 நகரங்களில் 12,770 பெண்களிடம் கருத்தாய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது.
கோஹிமா (82.9%), ஐஸ்வால் (70.6%), காங்டாக் (70.4%) மற்றும் இட்டாநகர் (70.4%) நான்கு வடகிழக்கு நகரங்கள் முதல் ஏழு பாதுகாப்பான நகரங்களில் இடம் பெற்றுள்ளன.
விசாகப்பட்டினம் (72.7%), புவனேஸ்வர் (70.9%) மற்றும் மும்பை (70.2%) ஆகியவை பிற சிறந்த நகரங்களில் அடங்கும்.
பெண்கள் பாதுகாப்பில் மிகக் குறைந்த தரவரிசையில் உள்ள நகரங்கள் ராஞ்சி (56.3%), ஸ்ரீநகர் (58.1%), கொல்கத்தா (58.2%), டெல்லி (58.5%), ஃபரிதாபாத் (58.7%), பாட்னா (59%) மற்றும் ஜெய்ப்பூர் (59.1%) ஆகியனவாகும்.
முதல் ஏழு பாதுகாப்பான நகரங்களில் மும்பை மட்டுமே உள்ள அதே நேரத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா கடைசி ஏழு இடங்களில் உள்ளன.