TNPSC Thervupettagam

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் சர்வதேச நினைவு தினம் 2025 - டிசம்பர் 09

December 12 , 2025 13 days 44 0
  • இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கௌரவித்து நினைவு கூர்வதும், உலகளாவிய தடுப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.
  • இந்த நாள் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையால் அனுசரிக்கப் பட்டது.
  • இனப்படுகொலையை வரையறுக்கும் மற்றும் அதைத் தடுக்கவும் தண்டிக்கவும் உலக நாடுகளுக்கு கடமை நிர்ணயிக்கும் 1948 ஆம் ஆண்டு ஐ.நா. இனப்படுகொலை உடன்படிக்கையுடன் இந்த நாள் ஒத்துப் போகிறது.
  • இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இனக்குழு, இன அல்லது மதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களை உள்ளடக்கியது, இதில் கொலை, தீங்கு விளைவித்தல் மற்றும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக இடம் மாற்றுதல் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்