இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் குழு – பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை
August 16 , 2019 2343 days 869 0
பெருநிறுவன விவகாரங்கள் துறை செயலாளரான இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் என்பவர் பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை (Corporate social responsibility - CSR) மீதான உயர் நிலைக் குழுவின் அறிக்கையை பெருநிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பித்தார்.
CSR அமைப்பை வலுப்படுத்துவதற்காக பின்வரும் முக்கியமான பரிந்துரைகளை இக்குழு அளித்துள்ளது.
CSR செலவினத்திற்கு வரி விலக்கு அளித்தல்
உள்ளூர் பகுதி முன்னுரிமைகளை தேசிய முன்னுரிமைகளுடன் சமநிலைப்படுத்துதல்
CSR விதிமுறையை மீறினால் அதனை ஒரு உரிமையியல் குற்றமாக ஆக்குதல்.