TNPSC Thervupettagam

இமாச்சல் கிரிஹினி சுவிதா யோஜனா

February 28 , 2020 2372 days 1045 0
  • "100% எல்பிஜி (திரவ பெட்ரோலிய வாயு) எரிவாயு இணைப்பைக்" கொண்ட நாட்டின் முதலாவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா நடைமுறைபடுத்தப் பட்டதைத் தொடர்ந்து, இந்த எரிவாயு இணைப்பு வழங்கப்படாத மீதமுள்ள வீடுகளை உள்ளடக்கும் வகையில் இமாச்சலப் பிரதேச மாநில அரசு தனது சொந்த இமாச்சல கிரிஹினி சுவிதா திட்டத்தை 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தியது.
  • ஓய்வூதியம் பெறுபவர், வருமான வரி செலுத்துவோர் அல்லது அரசு, வாரியம், மாநகராட்சி போன்றவற்றில் பணியாற்றும் எந்தவொரு உறுப்பினரையும் தவிர, எல்பிஜி இணைப்பு இல்லாத மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினரும் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்