இரண்டாவது திருநங்கை துணைக் காவல் ஆய்வாளர் - தமிழ்நாடு
August 2 , 2021 1755 days 1101 0
தமிழகத்தின் முதல் திருநங்கை துணைக் காவல் ஆய்வாளராக 2017 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி தேர்ச்சி பெற்றார்.
அவருக்கு அடுத்தபடியாக, தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிவன்யா எனும் திருநங்கை தமிழகத்தின் இரண்டாவது துணைக் காவல் ஆய்வாளராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
சிவன்யா திருவண்ணாமலை மாவட்டம், பாவுப்பட்டு கிராமத்தில் வசிக்கிறார்.