இரண்டாவது “சிறந்த தூய்மையான இடம்” – மதுரை மீனாட்சி அம்மன்
September 10 , 2019 2381 days 980 0
மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவின் இரண்டாவது “சிறந்த தூய்மையான இடமாக” (சுத்தமான இடம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி ஆணையரான எஸ்.விசாகன் சமீபத்தில் புது டில்லியில் மத்திய ஜல் சக்தி அமைச்சரான கஜேந்திர சிங் செகாவத்திடமிருந்து இதற்கான விருதைப் பெற்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட “சிறந்த தூய்மையான இடங்கள்” என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசால் பத்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.