கலப்பு பசுந்தாள் உரப் பயிர் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக என்று தேசிய விதைகள் கழகம் (NSC) ஆனது, இரண்டு கலப்பு பசுந்தாள் உரத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த நடைமுறையில் பல்வேறு பசுந்தாள் உரப் பயிர் இனங்களை ஊட்ட நிரப்புப் பண்புகளுடன் ஒரு சேர வளர்ப்பது மற்றும் மண்ணை வளப்படுத்துவதற்காக மீண்டும் அதனை மண்ணில் சேர்ப்பது போன்றவை அடங்கும்.
சில இனங்கள் களை முளைப்பதைத் தடுக்கும் வகையில் இயற்கைச் சேர்மங்களை வெளியிடுகின்றன, மற்றவை களை வளர்ச்சியை நேரடியாக ஒடுக்கும் அளவுக்கு மிக அடர்த்தியாக வளரும்.
பசுந்தாள் உரம் என்பது அறுவடை செய்வதற்குப் பதிலாக அவற்றை மண்ணில் மீண்டும் சேர்க்கப்படுவதற்காக என்று பிரத்தியேகமாக வளர்க்கப்படும் பயிர்களைக் குறிக்கிறது.
இந்தப் பயிர்கள் ஆனது, வயலிலிலேயே சிதைந்து, கரிமப் பொருட்கள் மற்றும் மிகவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் மண்ணை வளப்படுத்துகின்றன.