இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட வேட்பாளர்கள் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் விதியை ராஜஸ்தான் அமைச்சரவை நீக்கியுள்ளது.
மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்காக 1995 ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் விதி முறை அறிமுகப்படுத்தப் பட்டது, மேலும்1991–94 இல் 3.6 ஆக இருந்த கருவுறுதல் விகிதம் தற்போது 2 ஆகக் குறைந்துள்ளதால் இப்போது அது அவசியமற்றதாக கருதப் படுகிறது.
ராஜஸ்தான் பஞ்சாயத்து ராஜ் சட்டம், 1994 மற்றும் ராஜஸ்தான் நகராட்சி சட்டம், 2009 ஆகியவற்றை திருத்த இரண்டு திருத்த மசோதாக்கள் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.