TNPSC Thervupettagam

இரண்டுக் கப்பல்களுக்குப் பிரியாவிடை

June 7 , 2022 1159 days 514 0
  • இந்தியக் கடற்படையானது, அதன் இரண்டுக் கப்பல்களான ஐஎன்எஸ் நிஷாங்க் மற்றும் ஐஎன்எஸ் அக்சய் ஆகியவற்றிற்குப் பிரியாவிடை அளித்தது.
  • இரண்டுக் கப்பல்களும் 32 ஆண்டுகாலச் சேவைக்குப் பிறகு, கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் படையிலிருந்து விலக்கப்படும்.
  • அனைத்துக் கடற்படையினரும் தங்கள் கப்பல்களின் பெயர்களைத் தங்கள் சொந்த அடையாளமாக கொண்டுள்ளனர்.
  • ஐஎன்எஸ் நிஷாங்க் என்பது வீர் ரக ஏவுகணைப் பாதுகாப்பு கப்பல் வரிசையில் உருவாக்கப் பட்ட நான்காவது கப்பல் ஆகும்.
  • மேலும், 1971 ஆம் ஆண்டு போரில் வீரதீரச் செயலிற்குப் பெயர் பெற்ற கில்லர் படைப் பிரிவின் ஒருங்கிணைந்தப் பகுதியாக இது விளங்கியது.
  • ஐஎன்எஸ் அக்சய் என்பது 23வது ரோந்துக் கப்பல் படையின் ஒரு பகுதியாகும்.
  • இதன் முதன்மைப் பணி நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு மற்றும் கடலோர ரோந்து ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்