இந்திய இரயில்வே ஆனது 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 3.2 இலட்சம் மக்கள் சிகிச்சை பெறும் வகையில் 20,000 இரயில் பெட்டிகளை மாற்றியமைத்துள்ளது.
கோவிட் – 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான தனிமைப்படுத்துதல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய இரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளாக மாற்றப் பட்டுள்ளன.
ஓர் இரயில் பெட்டியில் 16 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்த இரயில் பெட்டிகள் செவிலியர் அறைகளையும் கொண்டுள்ளது.
குளிர்சாதன வசதியற்ற இரயில் பெட்டிகள் மட்டுமே தனிமைப்படுத்தப் பட்ட அறைகளாக மாற்றப்படுகின்றன.