TNPSC Thervupettagam

இராஜஸ்தானில் மின்சார வழித்தடங்கள்

August 4 , 2025 12 days 60 0
  • உச்ச நீதிமன்றக் குழுவானது, மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள கான மயில் (GIB) இனத்தைப் பாதுகாப்பதற்காக இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் சிறப்பு மின்சார வழித் தடங்களை அமைக்க பரிந்துரைத்தது.
  • கானமயில்கள் பெரும்பாலும் மேல்நிலை மின் இணைப்புகளில் மோதி இறக்கின்றன என்பதால் இந்தத் திட்டமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை இந்தப் பறவைகளின் வளங்காப்புடன் சமநிலைப்படுத்துகிறது.
  • வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு, கடத்தல் மற்றும் குறைந்த இனப்பெருக்கம் காரணமாக சுமார் 150 கானமயில்கள் மட்டுமே காடுகளில் உள்ளன.
  • ஆண்டுதோறும் 4 முதல் 5 பறவைகளின் உயிரிழப்பு கூட, அடுத்த 20 ஆண்டுகளில் அந்த இனத்தின் முழு அழிவுக்கு வழி வகுக்கும் என்று இந்திய வனவிலங்கு நிறுவனம் எச்சரித்தது.
  • இராஜஸ்தானில் சுமார் 80 கி.மீ நீளமுள்ள மின்சார வழித்தடங்களை நிலத்தடியில் அமைக்கவும், கானமயில் வாழும் மண்டலங்களுக்கு அருகிலுள்ள மிகவும் ஆபத்தான பகுதிகளை வேறு பாதைக்கு மாற்றவும் குழு பரிந்துரைத்தது.
  • இங்கு திருத்தப்பட்ட முன்னுரிமைப் பகுதிகள் இராஜஸ்தானில் சுமார் 14,013 சதுர கி.மீ மற்றும் குஜராத்தில் 740 சதுர கி.மீ எனக் குறிக்கப் பட்டன.
  • பறவைகள் இறப்பைக் குறைக்க நிலத்தடி அல்லது மின்கடத்தாப் பொருட்களால் சுற்றப் பட்ட மின் இணைப்புகளை அமைப்பதற்கான பகுதிகளை ஒரு கூட்டுக் குழு அடையாளம் காணும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்