பிரதமர் பீகார் இராஜ்ய ஜீவிகா நிதி சாக் சஹ்காரி சங்க லிமிடெட் நிறுவனத்தை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார்.
சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் நிறுவன மேம்பாட்டிற்காக சரியான நேரத்தில் மற்றும் மலிவு விலையிலான கடன் வழங்குவதை உறுதி செய்வதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.
ஜீவிகாவுடன் தொடர்புடைய சமூக உறுப்பினர்களுக்கு அணுகக் கூடிய/மலிவு வட்டி விகிதங்களில் நிதியை எளிதாக அணுக இந்த நிறுவனம் உதவும்.
இந்த முன்னெடுப்பானது, நிதி உதவி மூலம் வணிக விரிவாக்கத்தைச் செயல் படுத்துவதன் மூலம் கிராமப்புறப் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.