இராணுவ கால்நடைப்பிரிவானது (RVC) 2026ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக பங்கேற்றது.
அதன் 247 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, இப்படைப்பிரிவுக்கு ஒரு பெண் அதிகாரி தலைமை தாங்கினார்.
2023-ல் RVC-யில் இணைந்த கேப்டன் ஹர்ஷிதா ராகவ் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கினார்.
இந்த படைப்பிரிவு முதலில் 1779-ல் வங்காளத்தில் குதிரை துறை (Stud Department) என்ற பெயரில் நிறுவப்பட்டது, பின்னர் 1960-ல் முறையாக RVC எனப் பெயரிடப்பட்டது.
RVC ஆனது இந்தியா முழுவதும் இராணுவ நடவடிக்கைகள், தளவாடங்கள், உளவுப்பணி, போர் ஆதரவு மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவு அளிக்கிறது.