பிரதமர் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள இராஷ்ட்ர பிரேர்ண ஸ்தலத்தினைத் திறந்து வைத்தார்.
இது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 101வது பிறந்தநாளைக் குறிக்கிறது.
இதில் வாஜ்பாய், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் இடம்பெற்றிருந்தன.
தாமரை வடிவிலான அதி நவீன அருங்காட்சியகம் இந்தியாவின் தேசியப் பயணம், பாரதிய ஜன சங்கத்தின் (BJS) உருவாக்கம் மற்றும் டிஜிட்டல் மற்றும் அதிவேக தொழில் நுட்பங்கள் மூலம் இந்தத் தலைவர்களின் பங்களிப்புகளைக் காட்சிப் படுத்தியது.
இது லக்னோ மேம்பாட்டு ஆணையத்தின் (LDA) பசந்த் குஞ்ச் என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது என்பதோடுஇதன் கட்டுமானம் 2022 ஆம் ஆண்டில் தொடங்கியது.