8வது இராஷ்ட்ரிய போஷன் மா (2025) நிகழ்வானது டேராடூனில் ஊட்டச்சத்து மற்றும் அதிகாரமளிப்பை மையமாகக் கொண்டு நிறைவடைந்தது.
போஷன் மா நிகழ்வில் ஆண்களின் ஈடுபாடு, உள்ளூர் உணவுகள் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட ஆறு முக்கிய கருத்துருக்களைக் கொண்டு நிகழ்ந்தது.
அங்கன்வாடி சேவைகள் ஆனது, இந்தியா முழுவதும் 14 லட்சம் மையங்கள் மூலம் 9 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சேவை வழங்குகின்றன.
போஷன் டிராக்கர் செயலி ஊட்டச்சத்து சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தியுள்ளது.
உள்ளூர் சிறு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை சத்தான மற்றும் பருவ நிலைக்கு ஏற்ற உணவுகளாக ஊக்குவிப்பதை உத்தரகாண்ட் அரசு வலியுறுத்தியது.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்புகளின் இலவச விநியோகம் மற்றும் டிஜிட்டல் வழி ஆதரவு வழங்கலை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
2047 ஆம் ஆண்டிற்குள் 'சுபோஷித்' (ஊட்டச்சத்து மிக்க) மற்றும் 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) ஆகியவற்றை உருவாக்குவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.