வியட்நாம் நாடானது அதன் நீண்டகாலத்திய இரு குழந்தைகள் கொள்கையை கை விட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது அதன் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை மாற்றுவதையும், முதியோர்ச் சமூகத்தினால் எழும் நெருக்கடியினைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1999 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், வியட்நாமின் பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு சுமார் 2.1 குழந்தைகளாக இருந்தது.
2024 ஆம் ஆண்டில், நாட்டின் பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.91 குழந்தைகள் என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது.
ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற பிராந்திய அண்டை நாடுகளிலும் பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகின்றன.
அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆனது 1988 ஆம் ஆண்டில் இரு குழந்தைக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.