இரு நாடுகளுக்கிடையேயான பரிமாற்று ஒப்பந்தம் – இந்தியா மற்றும் ஜப்பான்
March 3 , 2019 2542 days 885 0
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஜப்பான் வங்கி ஆகியவை USD 75 பில்லியன் மதிப்பில் இரு நாடுகளுக்கிடையேயான பணப் பரிமாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது நாட்டில் அந்நியச் செலாவணி மற்றும் மூலதனச் சந்தையின் நிலைத் தன்மையை கொண்டு வருவதற்கு உதவும்.
இருநாட்டு பணப் பரிமாற்று ஒப்பந்தமானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று இந்தியப் பிரதமர் டோக்கியோவிற்கு பயணம் மேற்கொண்ட போது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே இது குறித்து பேசப்பட்டது.