ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த புதின ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
அழிவு மற்றும் பயங்கரவாதத்திற்கு மத்தியில் கலையின் ஆற்றலை மீண்டும் உறுதிப்படுத்தும் கட்டாயமான மற்றும் தொலைநோக்குமிக்க அவரது ஒட்டுமொத்தப் படைப்புகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
அவர் தனது முதல் புதினமான/நாவலான சடான்டாங்கோ (Satantango) மூலம் 1985 ஆம் ஆண்டிலேயே இலக்கிய உலகில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.