TNPSC Thervupettagam

ஈடு செய்யும் காடு வளர்ப்பு இலக்கு

August 4 , 2025 13 days 66 0
  • உச்ச நீதிமன்றத்தினால் இலக்கு நியமிக்கப்பட்ட, மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (CEC), ஈடு செய்யும் காடு வளர்ப்பு நிதிகளின் மேலாண்மை குறித்த ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.
  • 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சுமார் 2,09,297 ஹெக்டேர் இலக்கில் 1,78,261 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியா சுமார் 85 சதவீதத்திலான ஈடுசெய்யும் காடு வளர்ப்பு இலக்கை அடைந்தது.
  • ஈடு செய்யும் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் (CAMPA) கீழான நிதியைக் கையாள்வதில் தவறான பயன்பாடு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் உள்ளன.
  • குஜராத், சண்டிகர், மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்கள் இலக்குகளை முழுமையாக அடைந்தன.
  • மத்தியப் பிரதேசம் 21,107.68 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 21,746.82 ஹெக்டேர் பரப்பளவு வரை ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டது.
  • கர்நாடகா 2,775.12 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 2,761.26 ஹெக்டேர் பரப்பளவு வரை ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டது.
  • அருணாச்சலப் பிரதேசம் 21,478.03 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 20,719.46 ஹெக்டேர் பரப்பளவு வரை ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் 96.6 சதவீத இலக்கினை அடைந்தது.
  • உத்தரப் பிரதேசம் 6,096.7 ஹெக்டேரில் இருந்து 5,877.16 ஹெக்டேர் பரப்பளவு வரை ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் 96.4 சதவீத இலக்கினை எட்டியது.
  • மேகாலயா 514.76 ஹெக்டேரில் இருந்து 114.56 ஹெக்டேரில் 22.3 சதவீதத்தை மட்டுமே எட்டியது.
  • மணிப்பூர் 1,759.84 ஹெக்டேரில் இருந்து 666.94 ஹெக்டேர் பரப்பளவில் ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் 37.9 சதவீத இலக்கினை எட்டியது.
  • கேரளா 433.06 ஹெக்டேரில் இருந்து 171.80 ஹெக்டேர் பரப்பளவில் ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் 39.7 சதவீத இலக்கினை எட்டியது.
  • மேற்கு வங்காளம் 1,911.74 ஹெக்டேரில் இருந்து 748.25 ஹெக்டேர் பரப்பளவில் ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் சுமார் 39.2 சதவீத இலக்கினை எட்டியது.
  • தமிழ்நாடு 262.39 ஹெக்டேர் இலக்கில் 84.76 ஹெக்டேர் பரப்பளவில் ஈடு செய்யும் காடு வளர்ப்பினை மேற்கொண்டதன் மூலம் 32.3 சதவீத இலக்கினை எட்டியது.
  • 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான மாநில வருடாந்திரத் திட்டங்களுக்கு தேசிய CAMPA 38,516 கோடி ரூபாயை அங்கீகரித்தது.
  • மொத்த அங்கீகரிக்கப்பட்ட நிதியில், மாநிலங்கள் சுமார் 29,311 கோடி ரூபாயை வனத் துறைகளுக்கு ஒதுக்கின, அதில் 26,001 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டன.
  • இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட நிதியில் 67.5 சதவீதம் மட்டுமே செலவிடப் பட்டது.
  • மணிப்பூர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நிதிப் பயன்பாடு முறையே 100 சதவீதம், 100 சதவீதம் மற்றும் 97.8 சதவீதம் என வேறுபட்டது.
  • இதற்கு நேர்மாறாக, டெல்லி அதன் CAMPA நிதியில் சுமார் 23 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்