TNPSC Thervupettagam

ஈட்டி மரங்கள் வெட்ட தடை

August 27 , 2026 16 hrs 0 min 2 0
  • தொடர்புடைய வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனியார் நிலங்களில் ஈட்டி (ரோஸ்வுட்) மரங்களை வெட்டுவதற்கோ அல்லது அகற்றுவதற்கோ அனுமதி வழங்குவதை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
  • 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஈட்டி மரங்கள் (பாதுகாப்பு) சட்டம் மற்றும் அதன் 1995 ஆம் ஆண்டு விதிகளை ரத்து செய்வதற்கான முன்மொழிவை ஏற்றுக்கொண்ட அரசாணை எண் 88-ஐ நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
  • ஈட்டி மரம் தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு அரிய வகை மரம் மற்றும் இயற்கையாகவே மீண்டும் வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாதவாறு உள்ளதால், சட்டத்தை ரத்து செய்வதற்கான பரிந்துரை தர்க்கத்திற்கு முரணானது என்று நீதிமன்றம் கூறியது.
  • 2025 ஆம் ஆண்டு ஜூன் 9 தேதியிட்ட 1994 ஆம் ஆண்டுச் சட்டம் மற்றும் 1995 ஆம் ஆண்டு விதிகளை ரத்து செய்வது தொடர்பான அரசாணைக்கு இந்த வழக்கு சவால் விடுக்கிறது.
  • நீதிப்பேராணை மனு முடித்து வைக்கப்படும் வரை, தனியார் நிலங்களில் இருந்து ஈட்டி மரங்களை வெட்டவோ அல்லது அகற்றவோ அதிகாரிகள் அனுமதி வழங்க முடியாது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்