TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கான இடஒதுக்கீடுக் கொள்கை

July 5 , 2025 14 hrs 0 min 15 0
  • முதன்முறையாக, இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது பட்டியலிடப்பட்டச் சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) சமூகத்தினைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வேண்டிய அதிகாரப் பூர்வ இடஒதுக்கீடுக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இந்தக் கொள்கையானது உச்ச நீதிமன்றத்தின் உள் நிர்வாகத்தில் உள்ள நேரடி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்குப் பொருந்தும்.
  • 2025 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் கொள்கையானது, பதிவாளர்கள், மூத்த தனிப்பட்ட உதவியாளர்கள், உதவி நூலகர்கள், இளநிலை நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் நீதிமன்ற அவை உதவியாளர்கள் போன்ற பதவிகளுக்கு பொருந்தும்.
  • பதவி உயர்வுகளில், SC ஊழியர்களுக்கு 15% இடஒதுக்கீடும், ST ஊழியர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடும் கிடைக்கப்பெறும்.
  • இந்த நடவடிக்கையானது, உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதியான பட்டியலிடப்பட்ட சாதியினைச் சார்ந்த B.R.கவாய் காலத்தில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்