உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிய 14 கேள்விகள்
May 18 , 2025 23 days 95 0
இந்திய அரசியலமைப்பின் 143வது சரத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழக ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆலோசனை பெறுவதற்கு குடியரசுத் தலைவர் முயற்சித்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவரால் உச்ச நீதிமன்றத்திற்கு பின்வரும் 14 கேள்விகள் அனுப்பப் பட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்பின் 200வது சரத்தின் கீழ் ஒரு மசோதா சமர்ப்பிக்கப்படும் போது ஆளுநருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் (Discretions) என்ன?
இந்திய அரசியலமைப்பின் 200வது சரத்தின் கீழ் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யும் போது, அமைச்சர்கள் குழு வழங்கும் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
இந்திய அரசியலமைப்பின் 200வது சரத்தின் கீழ் ஆளுநர் அரசியலமைப்பு விருப்பு உரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
இந்திய அரசியலமைப்பின் 200வது சரத்தின் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறு ஆய்வுக்கு இந்திய அரசியலமைப்பின் 361வது சரத்து ஒரு முழுமையான தடையா?
அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு கால அவகாசமும், ஆளுநரால் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறையும் இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பின் 200வது சரத்தின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
இந்திய அரசியலமைப்பின் 201வது சரத்தின் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவர் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை எதுவும் இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பின் 201வது சரத்தின் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புத் திட்டத்தின் வெளிச்சத்தில், இந்திய அரசியலமைப்பின் 143வது சரத்தின் கீழ், குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகவோ அல்லது வேறு விதமாகவோ ஒதுக்கும்போது, உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று, உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
இந்திய அரசியலமைப்பின் சரத்து 200 மற்றும் 201வது சரத்தின் கீழ், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் முடிவுகள், சட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தையக் கட்டத்தில் நியாயப் படுத்தப்படுமா? ஒரு மசோதா அவ்வாறு சட்டமாக மாறுவதற்கு முன்பு, எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது நீதிமன்றங்கள் நீதித்துறைத் தீர்ப்பை மேற் கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?
இந்திய அரசியலமைப்பின் 142வது சரத்தின் கீழ், அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தச் செய்வதையும், குடியரசுத் தலைவர்/ஆளுநர் உத்தரவுகளையும் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?
மாநிலச் சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டம், இந்திய அரசியலமைப்பின் 200வது சரத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறையில் உள்ள ஒரு சட்டமா?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 145(3)வது சரத்தின் விதிமுறையைக் கருத்தில் கொண்டு, இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அதன் முன் நடவடிக்கைகளில் உள்ள ஒரு கேள்வி, அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான கணிசமான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்த பட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதைப் பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?
இந்திய அரசியலமைப்பின் 142வது சரத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் நடைமுறைச் சட்டம் அல்லது இந்திய அரசியலமைப்பின் 142வது சரத்து தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே உள்ளதா? அரசியலமைப்பு அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தின் தற்போதைய அடிப்படை அல்லது நடைமுறை விதிகளுக்கு முரணான அல்லது முரண்பாடான உத்தரவுகளைப் பிறப்பித்தல்/ஆணைகளைப் பிறப்பித்தல் வரை நீட்டிக்கப்படுகிறதா?
இந்திய அரசியலமைப்பின் 131வது சரத்தின் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த ஒரு அதிகார வரம்பையும் அரசியலமைப்பானது தடை செய்கிறதா?