TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த வழக்கு

February 7 , 2026 10 days 36 0
  • மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.
  • இந்தியாவில் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சர் தனது சொந்த வழக்கில் வாதிடுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் ஆஜரானது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தச் செயல்முறையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனிப்பட்ட முறையில் வாதங்களை முன்வைக்க அவர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.
  • இந்த வழக்கு, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்