ஜம்மு காஷ்மீரில் உள்ள 2 புதிய பாலங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
கத்துவா மாவட்டத்தில் உள்ள 1 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உஜ் பாலம்
சம்பா மாவட்டத்தில் உள்ள 617.40 மீட்டர் நீளம் கொண்ட பசந்தர் பாலம்
இந்த இரண்டு பாலங்களும் சம்பார்க் திட்டத்தின் கீழ், எல்லைச் சாலைகள் அமைப்பினால் (BRO - Border Roads Organisation) கட்டப்பட்டன.
1000 மீட்டர் நீளம் கொண்ட உஜ் பாலமானது BROவினால் கட்டப்பட்ட மிக நீளமான பாலமாகும்.
இதுபற்றி
BRO ஆனது இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காகவும் நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் உள்ள தொலைதூரப் பகுதிகளை மேம்படுத்துவதற்காகவும் 1960 ஆம் ஆண்டு மே 07 அன்று ஏற்படுத்தப்பட்டது.
இந்த அமைப்பு பின்வரும் இடங்களில் செயல்படுகின்றது.
21 மாநிலங்கள், 1 ஒன்றியப் பிரதேசம் (அந்தமான் நிக்கோபர் தீவுகள்)
ஆப்கானிஸ்தான், பூடான், மியான்மர், இலங்கை போன்ற அண்டை நாடுகள்.