May 5 , 2022
1146 days
1610
- உஜ்வாலா யோஜனா என்ற திட்டமானது 2016 ஆம் ஆண்டு மே 01 அன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாலியா எனும் நகரில் பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டது.
- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது 2022 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியை உஜ்வாலா திவாஸ் ஆக கொண்டாட முடிவு செய்துள்ளது.
- பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டமானது வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச LPG இணைப்பினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா அல்லது உஜ்வாலா சமையல் எரிவாயுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- இப்போது இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேலும் 10 மில்லியன் அளவிலான பயனாளிகளைச் சேர்ப்பதை உஜ்வாலா 2.0 திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
1610