மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமானது விரைவில் “உடான் 4.0” திட்டத்தைத் தொடங்கவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் மற்றும் அம்பிகாபூர் நகரங்கள் இணைக்கப்படும்.
பிலாஸ்பூர் ஆனது தனித்துவமான தரம் வாய்ந்த தூப்ராஜ் அரிசி மற்றும் கோசா பட்டுத் தொழிலுக்குப் பிரபலமானது.
உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் (உடான்) ஆனது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் பிராந்திய இணைப்புத் திட்டமாக 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.