TNPSC Thervupettagam

உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்

May 6 , 2021 1534 days 562 0
  • உணவுப் பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகமானது உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்திற்கான (Production Linked Incentive Scheme for Food Processing Industry – PLISFPI) இணையவழித் தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • மத்திய அரசின் இந்தத் திட்டமானது 2021-22 முதல் 2026-27 வரையிலான காலக் கட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.
  • இந்தத் திட்டமானது பிரதமர் அறிவித்த ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
  • இந்தியாவின் இயற்கை வளங்களைக் கொண்டு உலகளாவிய உணவு உற்பத்திப் பெரு நிறுவனங்களை உருவாக்குவதற்கும் சர்வதேசச் சந்தைகளில் இந்திய உணவு உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் இந்தத் திட்டம் உதவும்.
  • இந்தத் திட்டத்தில் இரண்டு கூறுகள் உள்ளன. அவை,
    • சமைக்க/சாப்பிட தயார் நிலையிலுள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றம் காய்கறிகள், கடல்சார் உற்பத்திப் பொருட்கள், மொசரெல்லா (இத்தாலியப் பாலாடைக்கட்டி) போன்ற நான்கு முக்கிய உணவு உற்பத்திப் பொருட்களின் தயாரிப்பிற்கு விற்பனை சார்ந்த ஊக்கத் தொகைகளை வழங்குதல்.
    • வெளிநாடுகளில் இந்தப் பொருட்களுக்கு அடையாளக் குறியிடுதல் (bronding) மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்வதற்காக சில மானியங்களை வழங்குதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்