உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் பாதை இணைப்புத் திட்டம்
February 20 , 2022 1242 days 493 0
இந்திய இரயில்வேயானது, உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் இணைப்பு (USBRL) திட்டத்தின் கீழ் T-49 என்ற முக்கிய மற்றும் நீளமான சுரங்கப் பாதையை இணைத்தது.
T-49 சுரங்கப்பாதையானது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் பாதை இணைப்புத் திட்டத்தின் கீழ் கத்ரா-பனிஹால் பிரிவின் சம்பர் மற்றும் அர்பிஞ்சலா நிலையத்திற்கு இடையே அமைந்துள்ளது.
இது 12.758 கி.மீ. நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதையாகும்.
இந்திய இரயில்வேயினால் நிறுவப்பட்ட ஒரு மிக நீளமான சுரங்கப் பாதையாக இது திகழும்.
பனிஹால்-காசிகுண்ட் என்ற பிரிவில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் பாதை இணைப்புத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட 11.2 கி.மீ. நீளமுள்ள பீர் பஞ்சால் சுரங்கப் பாதையின் சாதனையை இது விஞ்சியுள்ளது.