உதவியுடன் கூடிய மரணம் குறித்த மசோதா 2025 – ஐக்கியப் பேரரசு
June 26 , 2025 7 days 42 0
மரணமடையும் நிலையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதிக்கும் மசோதாவை ஐக்கியப் பேரரசின் மக்கள் மன்றம் நிறைவேற்றியது.
மரணமடையும் நிலையில் உள்ள பெரியவர்கள் (தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கான) மசோதா, பேச்சுவழக்கில் உதவியுடன் கூடிய மரண மசோதா என்று அழைக்கப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே வாழ்வதற்கான வாய்ப்புள்ள மக்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.