உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா இரயில் இணைப்பு
- பிரதமர் காஷ்மீரில் உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா இரயில் சேவை இணைப்பைத் தொடங்கி வைத்தார்.
- இது இந்த காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 272 கிலோ மீட்டர் நீள இரயில் சேவைத் திட்டமாகும்.
- 1884 ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மகாராஜா பிரதாப் சிங் இந்தத் திட்டத்தினைத் தனது பிரதமர் திவான் அனந்த் ராமிடம் முன்மொழிந்தார்.
- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1983 ஆம் ஆண்டு ஜம்மு-உதாம்பூர்-ஸ்ரீநகர் இரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டினார்.
- இது 2002 ஆம் ஆண்டு ஒரு தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டது.
- 119 கிலோ மீட்டர் நீளமுள்ள பாராமுல்லா-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-காசிகுண்ட் பிரிவு 2009 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டுச் செயல்பாட்டுக்கு வந்தது.

Post Views:
26