உத்திரப்பிரதேசம் – பிரகாஷ் ஹை டு விகாஷ் ஹை திட்டம்
December 27 , 2017 3097 days 1313 0
உத்திரப்பிரதேச அரசானது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து வீடுகளுக்கும் இலவச மின் இணைப்பு அளிக்கும் ”பிரகாஷ் ஹை டு விகாஷ் ஹை“ எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதன் தொடக்கமாக மதுரா மாவட்டத்தின் லோபன் மற்றும் கவ்சானா எனும் இரு கிராமங்களில் 100 சதவீத மின்மயமாக்கல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உத்திரப்பிரதேச அரசானது 2018ஆம் ஆண்டிற்குள் 16 மில்லியன் மின் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.