உயிரித் தொழில்நுட்ப தொடக்க நிறுவனக் கண்காட்சி 2022
June 13 , 2022 1164 days 581 0
2022 ஆம் ஆண்டின் உயிரித் தொழில்நுட்ப தொடக்க நிறுவனக் கண்காட்சியினைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இது நாட்டில் உயிரித் தொழில்நுட்பத் துறையின் விரிவான வளர்ச்சியின் மீதான ஒரு பிரதிபலிப்பாகும்.
உயிரித் தொழில்நுட்பத் துறை மற்றும் உயிரித் தொழில்நுட்பத் தொழில்துறை ஆராய்ச்சி உதவிக் குழு ஆகியவற்றினால் உயிரித் தொழில்நுட்பத் தொழில்துறை ஆராய்ச்சி உதவி அமைப்பின் பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்த கண்காட்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கருத்துரு: 'உயிரித் தொழில்நுட்ப தொடக்க நிறுவனப் புத்தாக்கங்கள்: ஆத்மநிர்பர் பாரதத்தை நோக்கியப் பயணம்' என்பதாகும்.