உயிரியல் பூங்கா மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கை 2022
September 23 , 2022 1021 days 504 0
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது சமீபத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான உயிரியல் பூங்கா மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையினை (MEE-ZOO) வெளியிட்டது.
இது இந்தியா முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் தற்போது 147 அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் பூங்காக்கள் உள்ளன.
அவை பெரிய (17), நடுத்தர (23), சிறிய (33), குறு உயிரியல் பூங்காக்கள் (60) மற்றும் மீட்பு மையங்கள் (14) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய உயிரியல் பூங்கா மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையானது 39 உயிரியல் பூங்காக்களைப் பெரிய மற்றும் நடுத்தர வகைகளின் கீழ் மதிப்பீடு செய்தது.
வண்டலூர் உயிரியல் பூங்காவானது "மிகச் சிறந்தப் பூங்கா" என்று மதிப்பிடப் பட்டு உள்ளதோடு, பெரிய உயிரியல் பூங்கா என்ற பிரிவில் அது மிகச் சிறந்த செயல்திறன் கொண்டதாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தின் பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்காவானது நடுத்தர உயிரியல் பூங்கா என்ற பிரிவில் சிறந்த செயல்திறன் கொண்டதாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
அலிப்பூர் விலங்கியல் பூங்கா, தேசிய விலங்கியல் மற்றும் நவாப் வாஜித் அலி ஷா விலங்கியல் பூங்கா ஆகியவை சூழல் கூறுகளில் சிறந்த செயல்திறன் கொண்டதாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
திட்டமிடல் கூறுகளில் சிறந்து விளங்கும் பூங்கா: வண்டலூர் உயிரியல் பூங்கா.
உள்ளீட்டுக் கூறுகளில் சிறந்து விளங்கும் உயிரியல் பூங்கா: வண்டலூர் உயிரியல் பூங்கா, பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா மற்றும் மைசூர் உயிரியல் பூங்கா.
செயல்முறைக் கூறுகளில் சிறந்து விளங்கும் பூங்கா: கான்பூர் விலங்கியல் பூங்கா மற்றும் மைசூர் உயிரியல் பூங்கா.
வெளியீட்டுக் கூறுகளில் சிறந்து விளங்கும் பூங்கா: வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா.
விளைவுக் கூறுகளில் சிறந்து விளங்கும் உயிரியல் பூங்கா: பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா.