உரிமையியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியல்கள்
January 4 , 2020 2367 days 887 0
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் கைதிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோரின் பட்டியலை பரிமாறிக் கொண்டன.
இந்த இரு நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இது குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
அதே நாளில் இந்த இரு நாடுகள் அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களையும் பரிமாறிக் கொண்டன.
2008 ஆம் ஆண்டில், இந்தியாவும் பாகிஸ்தானும் அந்தந்த நாட்டில் உள்ள கைதிகளுக்கு அவர்களது நாட்டுத் தூதரக அணுகலை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன.