TNPSC Thervupettagam

உருமாற்ற மலை முகடுகள்

May 15 , 2025 19 hrs 0 min 12 0
  • உச்ச நீதிமன்றம் ஆனது M C மேத்தா மற்றும் இந்திய ஒன்றியம் வழக்கில், 1996 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அதன் உத்தரவின் மீறல்கள் தொடர்பான காரணம் கேட்புக் குறிப்பாணைகளை வெளியிட்டுள்ளது.
  • 1996 ஆம் ஆண்டு உத்தரவானது, நீதிமன்றத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் மலை முகட்டு நிலம் ஆனது ஆக்கிரமிப்பு மற்றும் வனம் சாராதப் பயன்பாட்டிலிருந்துப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியது.
  • டெல்லி முகட்டுப் பகுதியானது, அந்த நகரின் பண்டைய ஆரவல்லி மலைத்தொடரின் கடைநிலை முனை மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மண்டலம் ஆகும்.
  • இது இந்தத் தலைநகரின் ஒரு பசுமை நுரையீரலாகவும் (இயற்கைப் பகுதி), பாலைவன மாக்கல் மற்றும் மாசுபாடு போன்ற ஆபத்துகளிலிருந்து இப்பகுதியைக் காக்கும் ஓர் இயற்கை அரணாகவும் செயல்படுகிறது.
  • மஹிபால்பூரின் தெற்கிலிருந்து துக்ளகாபாத்தின் தென்கிழக்கே சுமார் 35 கி.மீ. வரை நீண்டுள்ள இந்த மலைமுகட்டு நிலமானது, யமுனை நதியின் மேற்குக் கரையில் உள்ள வஜிராபாத் வரை பரவிக் காணப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்