தமிழ்நாடு மாநிலம், 2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கினை நிர்ணயித்துள்ளது.
'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற முன்னெடுப்பானது 2014 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
2025 ஆம் ஆண்டிற்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்கை 25% ஆக உயர்த்துவதே அதன் இலக்காக இருந்தது.
தேசிய சராசரி உயர்வு 16 சதவீதத்தினை மட்டுமே எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு ஏற்கனவே அதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சுமார் 25 சதவீத இலக்கினை அடைந்துள்ளது.
இந்தியாவிலேயே மிக அதிக அளவில் உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மற்றும் எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதியில் மிக முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில் 31,000க்கும் மேற்பட்ட செயல்படும் தொழிற்சாலைகள் உள்ளன.
மக்கள் தொகையில் சுமார் 6 சதவீதத்திற்கும் குறைவான பங்கையேக் கொண்டிருந்த போதிலும், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 15% பங்களிப்பை அளிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் 41%, காலணிகளில் 38% மற்றும் தானியங்கி இயந்திரங்களின் பாகங்கள் ஏற்றுமதியில் 45% பங்கினைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலமானது, மின்னணு ஏற்றுமதியை சுமார் 14 பில்லியன் டாலரிலிருந்து, 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்குகளை நிர்ணயித்துள்ளது.