அகதிகள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப் படுத்துவதையும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கான ஒரு புரிதலையும் அதற்கான ஆதரவையும் ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அகதிகளின் முதன்மையான நிலை தொடர்பான 1951 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2001 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று இந்தத் தினமானது முதன்முதலில் உலகளவில் அனுசரிக்கப் பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Solidarity with Refugees" என்பதாகும்.