அகதிகளை கௌரவிப்பதையும், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர் ஆணையத்தின் (UNHCR) தரவுகளின்படி, உலகளவில் சுமார் 117.3 மில்லியன் மக்கள் மோதல், துன்புறுத்தல் மற்றும் வன்முறை காரணமாக வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மில்லியன் கணக்கான அகதிகள், புகலிடம் கோருவோர் மற்றும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த நபர்களுடன் மிகப்பெரிய இடப்பெயர்வு நிலைமையாக சூடான் மாறி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.
கிட்டத்தட்ட 71% அகதிகளுக்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் புகலிடம் அளித்துள்ளன, அதேசமயம் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் சுமார் 25% பேருக்கு புகலிடம் அளித்துள்ளன.
இடம்பெயர்ந்த நான்கில் மூன்று பேர் பருவநிலை தொடர்பான அபாயங்களுக்கு அதிகம் உள்ளாகும் பகுதிகளில் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது என்பதோடு இது அவர்களின் பாதிப்பையும் அதிகரிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Solidarity with Refugees என்பதாகும்.