TNPSC Thervupettagam

உலக ஆற்றல் முதலீட்டு அறிக்கை 2025

June 16 , 2025 19 days 73 0
  • இது சர்வதேச எரிசக்தி முகமையால் (IEA) வெளியிட்ட புதிய அறிக்கையாகும்.
  • 2025 ஆம் ஆண்டில் உலகளாவியத் தூய்மையான எரிசக்தி முதலீடுகள் 2.2 டிரில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிசக்தி முதலீட்டில் சீனாவானது 25 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2015 ஆம் ஆண்டு முதல் 625 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதன் தூய்மையான எரிசக்தி முதலீடுகளை இரட்டிப்பாக்கியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், சீனாவானது சுமார் 100 GW திறன் கொண்ட புதிதான நிலக்கரி எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கு அங்கீகரித்துள்ளது என்பதோடு இது உலகளவில் 2015 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்ட நிலக்கரி எரிசக்தி சார்ந்த ஆலைகளுக்கான அதிக ஒப்புதல் ஆகும்.
  • இந்தியாவானது 2015 ஆம் ஆண்டில் சுமார் 13 பில்லியன் டாலராக இருந்த தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதலீடுகளை 2025 ஆம் ஆண்டில் 37 பில்லியன் டாலராகக் கணிசமாக அதிகரித்துள்ளது.
  • அதே தசாப்தத்தில், அதன் புதைபடிவ எரிபொருள் முதலீடுகளும் சுமார் 41 பில்லியன் டாலரில் இருந்து 49 பில்லியன் டாலராக உயர்ந்தன.
  • 2015 ஆம் ஆண்டில், அணுசக்தி மற்றும் இன்ன பிற தூய்மையான எரிசக்தி ஆதாரங்கள் மீதான நாட்டின் செலவினம் 1 பில்லியன் டாலராக இருந்தது என்பதோடு இது 2025 ஆம் ஆண்டில் 6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்