TNPSC Thervupettagam

உலக ஆஸ்துமா தினம் 2025 - மே 06

May 9 , 2025 5 days 39 0
  • இத்தினமானது, இந்தப் பாதிப்பினால் ஏற்படும் பாதிப்பு நிலைகள் மற்றும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • ஆஸ்துமா என்பது ஒரு நபரின் காற்றுப்பாதைகள் வீங்கி, குறுகி, தடித்து, மிக அதிகப் படியான சளியை உருவாக்கி, சுவாசிப்பதைக் கடினமாக்குகின்ற நாள்பட்ட சுவாசக் கோளாறு ஆகும்.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் சுமார் 4.55 லட்சம் என்ற உயிரழப்பு எண்ணிக்கையுடன் உலகளவில் சுமார் 26.2 கோடி மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • இந்தியாவில் சுமார் 3.4 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
  • இந்தியா உலகின் ஆஸ்துமா பாதிப்பில் 13% பங்கினை மட்டுமே கொண்டிருந்தாலும், உலகளாவிய ஆஸ்துமா உயிரிழப்புகளில் 42% பங்கினைக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Make Inhaled Treatments Accessible for ALL" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்