இந்த நாள், 1975 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற முதல் உலக இந்தி மாநாட்டைக் நினைவு கூருகிறது.
30 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாடு அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பதவிக் காலத்தில், 2006 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி இது முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக கடைப்பிடிக்கப் பட்டது.
வெளியுறவுத் துறை அமைச்சகமும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களும் இந்த நாளை ஆண்டுதோறும் கடைப்பிடிக்கின்றன.
இந்தத் தேதி, 1949 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) இந்தி முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வுடன் தொடர்புடையது.
1949 ஆம் ஆண்டில் தேவநாகரி எழுத்துருவில் உள்ள இந்தி இந்தியாவின் அதிகாரப் பூர்வ ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கும் வகையில் செப்டம்பர் 14 அன்று இந்தி திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.