உலக சுகாதார அமைப்பின் சமூக இணைப்பு ஆணையம் (2024-2026)
December 10 , 2023 714 days 409 0
உலக சுகாதார அமைப்பானது (WHO) சமூக இணைப்பிற்கான ஆணையத்தைத் தொடங்கியுள்ளது.
இது அமெரிக்கத் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய இளம் தூதர் சிடோ பெம்பா ஆகியோர் இதன் இணைத் தலைவர்கள் ஆவர்.
இது தனிமையை ஓர் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக கருத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்வதற்கான 3 வருட முன்னெடுப்பாகும்.
ஆரோக்கியம், நல்வாழ்வு, பொருளாதார முன்னேற்றம், சமூக மேம்பாடு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் சமூக இணைப்பின் பங்கைப் பகுப்பாய்வு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.