TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் ஒப்பந்தம்

May 6 , 2022 1143 days 499 0
  • இந்திய மற்றும் உலக வல்லுநர்கள் முதல் தொற்றுநோய் ஒப்பந்தத்திற்கான முதல் சுற்றுப் பொது கருத்துக் கேட்பில் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
  • இந்தப் பொது விசாரணைகள் மற்றும் பல கூட்டங்களின் முடிவுகள் 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள 77வது உலக சுகாதாரச் சபையின் போது சமர்ப்பிக்கப்படும்.
  • உலக சுகாதாரச் சபையானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தொற்றுநோய் ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான ஒரு உலகளாவியச் செயல்முறையைத் தொடங்க ஒப்புக் கொண்டது.
  • கோவிட்-19 பெருந்தொற்று ஆனது, உலக சுகாதார அமைப்புகளின் குறைபாடுகளை வெளிப்படுத்தியதை அடுத்து, புதுப்பிக்கப்பட்ட விதிகளின் தேவை உணரப்பட்டது.
  • 1948 ஆம் ஆண்டில் உலக சுகாதாரச் சபை நிறுவப்பட்டதிலிருந்து, அதன் இரண்டாவது சிறப்பு அமர்வில் 'The World Together' என்ற தலைப்பில் ஒரு முடிவை ஏற்றுக்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்