இந்திய மற்றும் உலக வல்லுநர்கள் முதல் தொற்றுநோய் ஒப்பந்தத்திற்கான முதல் சுற்றுப் பொது கருத்துக் கேட்பில் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
இந்தப் பொது விசாரணைகள் மற்றும் பல கூட்டங்களின் முடிவுகள் 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள 77வது உலக சுகாதாரச் சபையின் போது சமர்ப்பிக்கப்படும்.
உலக சுகாதாரச் சபையானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தொற்றுநோய் ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான ஒரு உலகளாவியச் செயல்முறையைத் தொடங்க ஒப்புக் கொண்டது.
கோவிட்-19 பெருந்தொற்று ஆனது, உலக சுகாதார அமைப்புகளின் குறைபாடுகளை வெளிப்படுத்தியதை அடுத்து, புதுப்பிக்கப்பட்ட விதிகளின் தேவை உணரப்பட்டது.
1948 ஆம் ஆண்டில் உலக சுகாதாரச் சபை நிறுவப்பட்டதிலிருந்து, அதன் இரண்டாவது சிறப்பு அமர்வில் 'The World Together' என்ற தலைப்பில் ஒரு முடிவை ஏற்றுக்கொண்டது.